பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சரியம் என்று கடலைப் பற்றிச் சொல்வார்கள். ஆனால், அதைவிட பெரிய ஆச்சரியம் தருவதாக இருக்கிறது கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கான படிப்புகள்!
''கப்பல் என்பது மிதக்கும் பொக்கிஷம் மாதிரி. எந்தத் துறையிலும் இல்லாத வாய்ப்பும், சம்பளமும் கப்பல் வேலையில் இருக்கிறது'' என்று உற்சாக வார்த்தைகளோடு பேச ஆரம்பித்தார் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பி.விஜயன்.
''தேசிய கடல்சார் மையத்தில் பி.எஸ்ஸி., படிப்புக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர்கள் சேரலாம். ஒரு சமயத்தில் 123 பேர் சேரமுடியும். அத்தனை பேருக்குமே படிப்பின் முடிவில் வேலை உறுதி என்பதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது'' என்றவர், கடல்சார் படிப்புகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அடங்கிய ஓர் அட்டவணையையும் கொடுத்தார்.
''இந்தப் படிப்புகள் தவிர, இந்த ஆண்டு முதல் இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பு படித்திருப்பவர்களும் சேரும் வகையில் 6 மாதப் படிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம். அதேபோல், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஒருவருடப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக கப்பல் பணிகளில் சேரலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு 'கிராஜுவேட் மரைன் இன்ஜினீயரிங்' பட்டம் வழங்கப்படும். இவர்கள் முதன்மை இன்ஜினீயராக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள். இவைதவிர, இந்த ஆண்டு கடல்சார் பல்கலைக்கழகத்தில் எட்டுத் துறைகளை புதிதாக உருவாக்க உள்ளோம்'' என்றவர்
''பொதுவாக மக்கள் மத்தியில் 'கப்பலில் வேலையா... அது ரொம்ப ரிஸ்க்கான விஷயமாச்சே...'னு ஒரு கருத்து இருக்கு. நிச்சயமாக சென்னை டிராஃபிக்கில் வண்டி ஓட்டுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ரிஸ்க் இல்லை'' என்றார் வெடிச் சிரிப்போடு!
உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான எ.பி.முல்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிஜார்னே ஃபோல்டேகர், ''இப்போது கடல்பரப்பில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. அதனால் கப்பலில் பணிபுரிவதில் உள்ள ரிஸ்க் பெருமளவு குறைந்திருக்கிறது. கொஞ்சம் ஸ்மார்ட்டாகவும், திறமையாகவும் செயல்படுபவராக இருந்தால் பதவி உயர்வும், சம்பள உயர்வும் வந்துகொண்டே இருக்கும்'' என்றார்.
வேலை தரும் படிப்பு
கடலிலும் வாய்ப்பு... கரையிலும் வாய்ப்பு!
பார்க்கப் பார்க்க அலுக்காத ஆச்சரியம் என்று கடலைப் பற்றிச் சொல்வார்கள். ஆனால், அதைவிட பெரிய ஆச்சரியம் தருவதாக இருக்கிறது கடல் சார்ந்த வேலைவாய்ப்புக்கான படிப்புகள்!
''கப்பல் என்பது மிதக்கும் பொக்கிஷம் மாதிரி. எந்தத் துறையிலும் இல்லாத வாய்ப்பும், சம்பளமும் கப்பல் வேலையில் இருக்கிறது'' என்று உற்சாக வார்த்தைகளோடு பேச ஆரம்பித்தார் மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பி.விஜயன்.
''தேசிய கடல்சார் மையத்தில் பி.எஸ்ஸி., படிப்புக்கு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர்கள் சேரலாம். ஒரு சமயத்தில் 123 பேர் சேரமுடியும். அத்தனை பேருக்குமே படிப்பின் முடிவில் வேலை உறுதி என்பதுதான் இந்தப் படிப்பின் சிறப்பு. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்கும் ஆட்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது'' என்றவர், கடல்சார் படிப்புகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் அடங்கிய ஓர் அட்டவணையையும் கொடுத்தார்.
''இந்தப் படிப்புகள் தவிர, இந்த ஆண்டு முதல் இயற்பியல், கணிதம், வேதியியல் பட்டப்படிப்பு படித்திருப்பவர்களும் சேரும் வகையில் 6 மாதப் படிப்பை அறிமுகப்படுத்த உள்ளோம். அதேபோல், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஒருவருடப் படிப்புக்குப் பின்னர் நேரடியாக கப்பல் பணிகளில் சேரலாம். இந்தப் பயிற்சி படிப்புக்கு 'கிராஜுவேட் மரைன் இன்ஜினீயரிங்' பட்டம் வழங்கப்படும். இவர்கள் முதன்மை இன்ஜினீயராக வேலைக்குச் சேர்க்கப்படுவார்கள். இவைதவிர, இந்த ஆண்டு கடல்சார் பல்கலைக்கழகத்தில் எட்டுத் துறைகளை புதிதாக உருவாக்க உள்ளோம்'' என்றவர்,
''பொதுவாக மக்கள் மத்தியில் 'கப்பலில் வேலையா... அது ரொம்ப ரிஸ்க்கான விஷயமாச்சே...'னு ஒரு கருத்து இருக்கு. நிச்சயமாக சென்னை டிராஃபிக்கில் வண்டி ஓட்டுவதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ரிஸ்க் இல்லை'' என்றார் வெடிச் சிரிப்போடு!
உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான எ.பி.முல்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிஜார்னே ஃபோல்டேகர், ''இப்போது கடல்பரப்பில் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. அதனால் கப்பலில் பணிபுரிவதில் உள்ள ரிஸ்க் பெருமளவு குறைந்திருக்கிறது. கொஞ்சம் ஸ்மார்ட்டாகவும், திறமையாகவும் செயல்படுபவராக இருந்தால் பதவி உயர்வும், சம்பள உயர்வும் வந்துகொண்டே இருக்கும்'' என்றார்.
'அகாடமி ஆஃப் மேரிடைம் எஜுகேஷன் அண்ட் டிரைனிங்' (AMET) நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் தலைவர் ராமச்சந்திரன் பேசும்போது, ''துறைமுகக் கட்டுமானப் பொறியியல், எண்ணெய் வளங்களைக் கடலில் கண்டறிவது தொடர்பான பெட்ரோல் இன்ஜினீயரிங் படிப்புகளும்கூட இப்போது முக்கியத்துவம் பெறத் தொடங்கி இருக்கின்றன. அதனால், கடல்சார் படிப்பு என்பதற்கான எல்லை விரிவடைந்து கொண்டே போகிறது'' என்றார்
இதே நிறுவனத்தின் மரைன் இன்ஜினீயரிங் துறைத் தலைவர் வேணுகோபால், ''இந்தத் துறையைப் பொறுத்தவரையில் 21 வயதில் வேலைக்குச் சேர்பவர்கள் 30 வயது வரை நன்கு சம்பாதித்துவிட்டு, கப்பல் பணியில் இருந்து விடுபட்டு துறைமுகம் சார்ந்த பணிக்கு வந்துவிடலாம். இப்போது மின்துறை முக்கியத்துவம் பெற்று வருவதால், அந்தத் துறையில் தெர்மல் பவர் பிளான்ட் மற்றும் இதர மின் தயாரிப்பு நிறுவனங்களில் நிர்வாகப் பணிகளுக்கு கப்பல் துறையில் வேலை பார்த்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கிறது. அதேபோல நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகப் பணிகளிலும் எளிதாக வேலைக்குச் சேரமுடியும். மரைன் இன்ஜினீயரிங் படித்தால், கப்பலில் இருக்கும்போதும் வாய்ப்பு; கரைக்கு வந்தாலும் வாய்ப்பு'' என்றார்.
ஹாங்காங்கைச் சேர்ந்த 'வாலெம்' கப்பல் நிறுவனத்தின் துணைத்தலைவரும் கேப்டனுமான ஜி.ராமசாமி, ''உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் துறைமுகம் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இவர்கள் நிலையை இந்தியத் துறைமுகங்கள் அடையவேண்டும். அதை நோக்கித்தான் மத்திய அரசு தனியார் நிறுவனங்களோடு கைகோத்துச் சென்றுகொண்டிருக்கிறது. வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறை என்பதால் வேலைவாய்ப்புக்கும் பஞ்சம் இருக்காது'' என்றார்.
கப்பல் பணியில் இருந்து விடுபட்டு வருகிறவர்களுக்கு மரைன் கல்லூரிகளில் ஆசிரியர் பணி, துறைமுகங்களில் ஷிப்பிங் நிறுவனங்களில் சர்வேயர் பணி, பயிற்சியாளர் பணி, டெக்னிக்கல் சூப்பிரடென்டன்ட் போன்ற வேலைகள் கிடைக்கின்றன. அதனால், இந்தப் படிப்பைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது.
என்ன, கடலில் குதிக்கத் தயாராகிவிட்டீர்களா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment