ஒவ்வொரு பெற்றோரும் முதலில் செய்ய வேண்டிய விஷயங்கள் நான்கு இருக்கின்றன. முதலில் பணத்தின் மதிப்பை உணர்த்த வேண்டும். அடுத்து, பணத்தைச் சேர்க்கும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும், மூன்றாவதாக உயர்ந்ததாக ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கடைசியாக நிர்ணயித்த இலக்கை நோக்கிய பயணத்துக்கான பாதையை வகுக்கவேண்டும்.
பத்து ரூபாய் நோட்டின் மதிப்பு பத்து ரூபாய்தானே..? இதில் மதிப்பை உணர்த்துவது என்றால் என்ன என்ற கேள்வி வரலாம். மதிப்பு என்பது நாணயத்தின் மதிப்பு அல்ல... அந்த பணத்தை உண்டாக்க எத்தனை சிரமப்பட்டோம் என்பதை உணர வைப்பது. அதைச் சரியாகச் செய்துவிட்டால் பாதி சிக்கல் தீர்ந்துவிடும். உழைப்பின் அருமையை பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்தால், அவர்கள் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு போய் ஜீன்ஸ் வாங்கிக்கொண்டு வரமாட்டார்கள். இதுதான் பணத்தின் மதிப்பை உணர்த்துவது!
குடும்பத்தின் வருமானம் எவ்வளவு... செலவுகள் எவ்வளவு என்ற பட்ஜெட் பிள்ளைகளுக்கும் தெரிய வேண்டும். அப்போதுதான் நண்பர்களுக்குப் பிறந்தநாள் பார்ட்டி கொடுக்கும் பணத்தில் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு அரிசி வாங்கிப் போடலாம் என்ற யதார்த்தம் புரியும். இதுதான் முதல் படி..!
Thursday, December 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment